ஒப்புதல் வழங்கியது பாதுகாப்பு அமைச்சு..! மிக விரைவில் படகுசேவை, வென்றார் டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
ஒப்புதல் வழங்கியது பாதுகாப்பு அமைச்சு..! மிக விரைவில் படகுசேவை, வென்றார் டக்ளஸ்..

யாழ்ப்பாணம் - தமிழகம் இடையிலான சரக்கு கப்பல் சேவையினை நடாத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் சேவைகள் ஆரம்பமாகும். எனவும் கூறியுள்ளார். 

குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியும் என அமைச்சர் கூறினார்.

மேலும் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அதேவேளை, யாழ்ப்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி 

ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு