நிறைபோதையில் இளம் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை மடக்கி பிடித்து முறையாக கவனித்த பொதுமக்கள்! மனைவி வைத்தியசாலையில்...

ஆசிரியர் - Editor I
நிறைபோதையில் இளம் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை மடக்கி பிடித்து முறையாக கவனித்த பொதுமக்கள்! மனைவி வைத்தியசாலையில்...

நிறைபோதையில் மனைவியின் கழுத்தை வெட்டிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பெற்றுவருகின்றார். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் திருகோணமலை - செல்வநாயகபுரம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக உப்புவெளி பொலிஸார் தொிவத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30 வயது) என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுபோதையில் வந்த கணவன் மனைவியான குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு