கொலைக்கான காரணம் தெரிய வேண்டும்!! -கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் தாயார் கோரிக்கை-

ஆசிரியர் - Editor II
கொலைக்கான காரணம் தெரிய வேண்டும்!! -கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் தாயார் கோரிக்கை-

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர் கார்த்திக்கின் தாயார தனது மகன் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி கல்லூரியில் பயின்றுவந்த கார்த்திக் வாசுதேவ் (வயது 21) பகுதி நேர பணிக்காக சென்று கொண்டிருந்த போது ரொரன்றோவிலுள்ள சுரங்க புகையிரத நிலையத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் கார்த்திக்கின் தாயார் பூஜா வாசுதேவ் கூறுகையில், எங்களை தினமும் வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும்.

பிள்ளையை இழந்து இரண்டு மாதங்களாக நாங்கள் சரியான தூக்கமின்றித் தவிக்கின்றோம். அந்த நபர் கார்த்திக்கை மட்டும் கொல்லவில்லை, எங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொன்றுவிட்டார்.

எங்கள் பிள்ளை ஏன் கொல்லப்பட்டான் என்று தெரியாமல் தினமும் நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு