விசுவமடுவில் கடும் பதற்றம்..! திரும்பும் இடமெல்லாம் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ள இராணுவம், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நோில் சென்றார்..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் உருவான மோதலை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கு காணும் இடமெல்லாம் ஆயுதங்களுடன் இராணுவம் களமிறக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ காவலரணில் இருந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தை தொடர்ந்து 4 பேரை இராணுவம் கைது செய்துள்ளது. 

மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது, இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நிலைமைகளை நோில் ஆராய்ந்ததுடன், பொலிஸாருடன் கலந்துரையாடினார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு