விசுவமடு பகுதியில் பதற்றம்..! இராணுவம் துப்பாக்கி சூடு, காயமடைந்த இருவர் உட்பட 4 பேர் இராணுவத்தால் கைது..

ஆசிரியர் - Editor I
விசுவமடு பகுதியில் பதற்றம்..! இராணுவம் துப்பாக்கி சூடு, காயமடைந்த இருவர் உட்பட 4 பேர் இராணுவத்தால் கைது..

முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியை அண்மித்த பகுதியில் கடும் பதற்றமான சூழல் உருவாகியிருக்கின்றது. 

அங்கு இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதுடன், காயமடைந்த இருவர் உட்பட 4 பேர் படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவத்தின் பாதுகாப்புச் சாவடிக்கு கல்லெறிந்ததை அடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டதாக 

இராணுவப் பேச்சாளர் பிரிக் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு