ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை..! 8 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை..! 8 பேர் கைது..

அனுமதியின்றி விறகு ஏற்றிச்சென்ற 8 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் (12) கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் பூநகரி சங்குபிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் இக்னு அஷார் அவர்களின் தலைமையில் 

மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட அவரின் குழுவினரினால் ஆனையிரவு‌ வீதித்தடையில் வைத்து அனுமதியின்றி ஏற்றிவரப்பட்ட விறகுகளுடன் ஆறு வாகனங்களும் 

 பூநகரி சங்குப்பிட்டி பால வீதி தடையில் 02 வாகனங்களுமாக 08 வாகனங்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒதுக்கப்பட்ட காடுகளில் இருந்து பச்சை மரங்களை வெட்டி அனுமதி பத்திரம் இன்றி ஏற்றி வந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு