பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் வெட்டிக் கொலை..!

ஆசிரியர் - Editor I
பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் வெட்டிக் கொலை..!

பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - மல்லாவி பாலிநகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொலை செய்யப்பட்ட நபர் பாலிநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (40) என தெரியவந்துள்ளது.ச

டலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக 

முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு