மதுபோதையில் கோஷ்டி மோதல்..! ஒருவர் அடித்துக் கொலை, 4 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் கோஷ்டி மோதல்..! ஒருவர் அடித்துக் கொலை, 4 பேர் படுகாயம்...

முல்லைத்தீவு - துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்றய தினம் இரவு மதுபான விருந்தில் இடம்பெற்ற கோஷ்டி முாதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

சம்பவத்தில் துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அதே இடத்தை சேர்ந்த மேலும் நால்வர் 

மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் 

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு