400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது குண்டு வீச்சு!! -உக்ரைனில் மூர்க்க தாக்குதல் நடத்தும் ரஷிய-

ஆசிரியர் - Editor II
400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது குண்டு வீச்சு!! -உக்ரைனில் மூர்க்க தாக்குதல் நடத்தும் ரஷிய-

உக்ரைன் கிழக்குப் பகுதியில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை கட்டடம் மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலர் காயமடைந்து உள்ளனர்.

மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன. இந்நிலையில் டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பாக்முட்டில் பாடசாலை மற்றும் அதன் நிர்வாக கட்டடம் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் உயிர்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், சேதமடைந்த கட்டிடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணி மேற்கொள்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு