இது வெறும் தொடக்கம் மட்டுமே..! ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பாடு மட்டும் சாப்பிடும் நாள் உருவாகலாம்...

ஆசிரியர் - Editor I
இது வெறும் தொடக்கம் மட்டுமே..! ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பாடு மட்டும் சாப்பிடும் நாள் உருவாகலாம்...

நாடு தற்போதுதான் நெருக்கடியின் ஆரம்பத்தில் உள்ளது மோசமான விடயங்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. என கூறியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 

தற்போது எரிபொருளிற்கான வரிசைகள் இல்லை. நான் பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன்.

ஆனால் உங்களில் பலருக்கு அது தெரியாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

நாளாந்தம் கப்பல்களிற்கு கொடுப்பதற்காக நான் 40 மில்லியன் டொலர்களை தேட வேண்டியநிலையில் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொருளாதாரத்தை அழித்துவிட்டோம்,வங்கிகளிற்கு டிரில்லியன் ரூபாய்களை செலுத்தவேண்டிய அரசஸ்தாபனங்கள் உள்ளன, நஸ்டத்தில் இயங்கும் திணைக்களங்கள் அரச ஸ்தாபனங்கள் உள்ளன, 

முன்னுரிமை பெறாத இலங்கைக்கு நன்மையளிக்காத திட்டங்கள் உள்ளன என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்திற்கான போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர் ஒக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பெரும்போகத்திற்கு உரங்கள் கிடைத்தால் அடுத்த வருடம்பெப்ரவரி மாதமளவில் நாங்கள் பெப்ரவரி மாதமளவில் தன்னிறைவு நிலையை எட்டுவோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மூன்று நேரம் உணவு உண்ணமுடியாத -ஒரு நாளைக்கு இரண்டு நேரம் மாத்திரமே மக்கள் உணவு உண்ணும் நிலை உருவாகும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.

அரசாங்கம் நட்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் எங்களிற்கு வெளியிலிருந்து சில பில்லியன் டொலர்கள் அவசியம் இல்லாவிட்டால் நாடு எதிர்காலம் இல்லாதநிலைக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நிராகரித்த மக்களை நோக்கி நாங்கள் மீண்டும் நேசக்கரத்தை நீட்டவேண்டும்,1952 முதல் ஜப்பான் எங்களின் நேசநாடாக காணப்படுகின்றது ஆனால் கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற விடயங்களால் அது காயப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிஸ்டவசமாக இந்தியா உதவ முன்வந்துள்ளது ஏனைய நாடுகளும் உதவுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். சீனா உதவி வழங்க முன்வந்தது ஆனால் அரசாங்கத்தை சேர்ந்த யாரோ குறித்து அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். 

அதனை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் நாடு மேற்கை நோக்கி பார்வையை திருப்பவேண்டியுள்ள போதிலும் மேற்குலகம் துரதிஸ்டவசமாக பணவீக்கம்,

உக்ரைன் ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை தனது தவறுகளிற்காக மன்னிப்பு கோருவதும் உதவிகளிற்காக நண்பர்களை உருவாக்குவதும் அவசியம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு