இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள உத்தரவாதம்..!

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள உத்தரவாதம்..!

இலங்கைக்கு தேவையான அத்தனை உதவிகளையும் இந்தியா நிச்சயமாக வழங்கும். என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

இந்தியா - தமிழகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும்.

அண்டை நாடு என்பதுடன் நட்பு நாடு என்கிற வகையில் உணவு. மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். 

யாழ்பாணத்திற்கு சென்று திட்டங்களை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நான் என கூறினார். 

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு, இந்தியா துணை நிற்கும். ஈழத்தமிழர்கள் உள்பட அனைவருக்கும் இந்தியா உதவி வருகிறது.

எனவும் இந்திய பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு