வரதட்சணை கொடுமை!! -2 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பெண்-

ஆசிரியர் - Editor II
வரதட்சணை கொடுமை!! -2 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பெண்-

தெலுங்கானாவில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் 2 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நர்கெட்பல்லியில் உள்ள அவுரவாணி கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளியான நரேஷ் (வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாத்விக் (வயது 2) என்ற குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது லாஸ்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 35 இலட்சம் ரூபா கொடுப்பதாக உறுதியளித்தனர். முதலில் 10 இலட்சம் ரூபா கொடுத்துள்ளனர். பின்னர் கோழிப்பண்ணை வைக்க மீதி வரதட்சணைப் பணத்தை தரவேண்டும் என்றும் லாஸ்யாவிடம் கூறியுள்ளார். 

அழுத்தத்தின் காரணமாக, லாஸ்யாவின் குடும்பத்தினர் 20 நாட்களுக்கு முன்பு நரேசுக்கு 20 இலட்சம் ரூபா கொடுத்துள்ளனர். ஆனாலும் நரேஷ் மேலும் 10 இலட்ச ரூபாய் தர வேண்டும் என்று கூறி லாஸ்யாவை துன்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாமியார் வீட்டை விட்டு வெளியே சென்ற போது லாஸ்யா தன்னுடைய 2 வயது மகனை தூக்கிட்டு கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு