கூட்டு பாலியலின் பின் பெண் எரித்து கொலை!! -6 இளைஞர்கள் கைது-

ஆசிரியர் - Editor II
கூட்டு பாலியலின் பின் பெண் எரித்து கொலை!! -6 இளைஞர்கள் கைது-

ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயதுடைய மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு