மியான்மார் கடற்கரையில் ஒரே நாளில் கரையொதுங்கிய 14 சடலங்கள் மீட்பு!!

ஆசிரியர் - Editor II
மியான்மார் கடற்கரையில் ஒரே நாளில் கரையொதுங்கிய 14 சடலங்கள் மீட்பு!!

மியான்மார் நாட்டின் கடற்கரையில் 23 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 14 சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றது,  அவர்கள் பயணித்த படகு நடுக் கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

14 பேரின் சடலங்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உட்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு