அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!! -18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!! -18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி-

அமெரிக்ககா நாட்டில் இயங்கிவரும் ஆரம்பப் பாடசாலையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிக்கோ எல்லை அருகேயுள்ள உவால்டே நகரிலுள்ள ரொப் ஆரம்பப் பாடசாலையிலேயே மேற்படி துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவர்கள்  7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் அவர். 18 வயதான இளைஞன் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் 18 வயதான சல்வடோர் ரமோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெக்ஸாஸ் ஆளுநர் கிறேக் அபோட் தெரிவித்துள்ளார்.

தாக்குதலாளியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு