தேநீர் கடையில் மொய் விருந்து!! -இலங்கை மக்களுக்கு நிதி சேகரிப்பு-

ஆசிரியர் - Editor II
தேநீர் கடையில் மொய் விருந்து!! -இலங்கை மக்களுக்கு நிதி சேகரிப்பு-

இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள தேநீர் கடையொன்றில் மொய் விருந்து நடத்தி நிதி சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சிவக்குமார் என்பவரே இவ்வாறு மொய் விருந்தை நடத்தி இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதி சேகரித்துள்ளார். 

இவர்,  2018 ஆம் ஆண்டில் , 'கஜா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது,  30 ஆயிரம் ரூபாவை மக்களுக்கு வழங்கியுள்ளார். கொரோனா பரவலின் போது, பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக, தனது தேநீர் கடையில் மொய் விருந்து நடத்தி, 20 ஆயிரம் ரூபாயை, வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு