மீனவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணை மானியம் வழங்க தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
மீனவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணை மானியம் வழங்க தீர்மானம்..

2018-05-10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை மாற்றம் ஏற்பட்டது. 

இதனால் குறைந்த வருமானம் பெறும் மின்சார வசதியற்ற குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணையில் இயங்கும் மீன்பிடி படகுகளை உபயோகிக்கும் மீனவர்களுக்கும் மண்ணெண்ணெயை மானியமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கேற்ப மண்ணெண்ணெய் மானிய கொடுப்பனவு தொகையை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவது தொடர்பாக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பான தகவல்களை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் என்பவற்றில் இருந்து பெறமுடியும். 

இந்த தகவலுக்கமைய மண்ணெண்ணெய் விலை மாற்றமடைந்த திகதியிலிருந்து மானிய நிதி வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு