யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் உழவு இயந்திரம் மீது மோதி கோர விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் உழவு இயந்திரம் மீது மோதி கோர விபத்து..!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் இன்று (21) அதிகாலை 12. 45 மணியளவில் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

உழவு இயந்திரத்தின் பெட்டியில் மின்விளக்குகள் சமிக்ஞைகள் இன்மையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹயஸ் வாகனத்தில் பயணம் செய்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை 

மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு