கண்ணீருடன் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13ம் ஆண்டு நினைவேந்தல்..!

ஆசிரியர் - Editor I
கண்ணீருடன் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13ம் ஆண்டு நினைவேந்தல்..!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கண்ணீருடன் நடைபெற்றது.

2009 ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு குறுகிய நிலப்பரப்பில முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்று வரும் இந்நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு