நந்திக்கடலில் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்..!

ஆசிரியர் - Editor I
நந்திக்கடலில் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்..!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெறும் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, 

உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனும் கலந்துகொண்டார்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு