மாணவியை கடத்தி பலாத்காரம்!! -இளைஞருக்கு 35 ஆண்டு சிறை-

ஆசிரியர் - Editor II
மாணவியை கடத்தி பலாத்காரம்!! -இளைஞருக்கு 35 ஆண்டு சிறை-

அரியலூர் மாவட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த, இளைஞருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குறித்த மாவட்டம் சித்துடையார் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞர் பிளஸ் டூ படித்து வந்த மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். 

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அவ்விளைஞர் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 

இதையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார் அதில், மாணவியை கடத்தி சென்றதற்காக குற்றவாளிக்கு 10 ஆண்டுகளும், அவரை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு