பெண் சட்டத்தரணி மீது நடு வீதியில் கொடூர தாக்குதல்!!

ஆசிரியர் - Editor II
பெண் சட்டத்தரணி மீது நடு வீதியில் கொடூர தாக்குதல்!!

இந்தியாவின் கர்நாடகா பாகல்கோட் மாவட்டம், விநாயக் நகர் அருகே பெண் சட்டத்தரணி ஒருவர் வீதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சட்டத்தரணியான சங்கீதா என்பவரை மாந்தேஷ் என்பவர் வீதியில் கொடூரமாக தாக்கியுள்ளார். அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்து, வயிற்றில் எட்டி மிதிக்கிறார். நடு வீதியில் நடைபெறும் இந்த சம்பவத்தை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாலும், யாரும் அருகே சென்று தாக்குதல் நடத்துபவரை தடுக்கவும் இல்லை. பெண்ணுக்கு உதவவும் இல்லை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், பெண் சட்டத்தரணியை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். ஒரு வழக்கு தொடர்பான தனிப்பட்ட வன்மம் காரணமாக அந்த பெண்ணை மாந்தேஷ் தாக்கியுள்ளார். 

அந்த பெண் சட்டத்தரணி தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியும் உள்ளார் என தெரிவித்துள்ளனர். இருவரும் இதற்கு முன்பே பலமுறை சண்டையிட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு