யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி விடுத்துள்ள கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி விடுத்துள்ள கோரிக்கை..!

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது A+ வகை குருதிக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி தொிவித்துள்ளது. 

அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னரான இரத்ததான முகாம் நிகழ்வுகள் இடை நிறுத்தப்பட்டமையாலும், 

நேரடியாக இரத்த வங்கிப் பிரிவிற்கு வருகை தந்து இரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையாலும் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில்

ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, குருதிக் கொடையாளர்களை இரத்ததானம் வழங்க முன்வருமாறும், குருதிக் கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு