தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதலுக்கு திட்டமாம்? இந்திய புலனாய்வு அமைப்புக்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் செய்தி..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதலுக்கு திட்டமாம்? இந்திய புலனாய்வு அமைப்புக்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் செய்தி..

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு ஒன்றிணைவதாக இந்திய புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் இலங்கையில் தாக்குல்களை நடாத்த தயாராகி வருகின்றனர். 

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மத்தியில் பன்னாட்டுத் தொடர்புகளை கொண்ட புலம்பெயர் தமிழர்களின் சில பிரிவினர் போராட்டக்காரர்கள் - படையினர் இடையிலான மோதல்களில் தங்கள் இருப்பை உணர்த்த முயற்சித்துள்ளனர். 

என பொலிஸ் வட்டாரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தன. முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க தாக்குதல்களை திட்டமிடுவது மட்டுமின்றி, 

தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், செய்தி வாசிப்பாளர் இசை பிரியா மற்றும் பலர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும் முன்னாள் புலிகள் சதித்திட்டம் தீட்டினர்.

உளவுத்துறை உள்ளீடுகளை மேற்கோள்காட்டி ஆதாரங்கள், இலங்கையில் தங்கள் மோசமான திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்காக சில முன்னாள் போராளிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநில புலனாய்வு மற்றும் உள்ளூர் பொலிஸ் சிறப்புக் குழுக்கள், மாநிலத்தில் 1,000 கிமீ கடற்கரையோரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

தமிழக பொலிஸின் கடலோர பாதுகாப்பு குழு கடல் எல்லையில் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஆபத்து காரணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆழ்கடலிலும், 

சர்வதேச கடல் எல்லைக் கோட்டிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. இலங்கைப் குடிமக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்குமாறு கரையோரப் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 

கடலுக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்துவதற்காக அனைத்து கடலோர மாவட்டங்களின் பொலிஸ் அத்தியட்சகர்களும் சோதனைச் சாவடிகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனச் சந்தேகிக்கப்படும் அல்லது அதன் முன்னாள் போராளிகளின் செயற்பாடுகளை சமீப வருடங்களாக தமிழ்நாடு அவதானித்து வருகின்றது.

கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு முகாமை, சர்வதேச தொடர்புகளுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் செயற்பாட்டாளரான சபேசன் என்ற சற்குணம் என்பவரை கைது செய்தது 

மற்றும் இலங்கையில் அமைப்பை புத்துயிர் பெற நிதி திரட்டியது. மற்றொரு வழக்கில், செயலற்ற வங்கிக் கணக்கில் கிடக்கும் பெரும் தொகையை மோசடியான முறையில் எடுக்க மும்பை சென்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

விசாரணையில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணிக்காக அவர் நியமிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது என்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு