பலவந்தமாக மதுபானம் பருக்கி பேத்தியின் கணவனால் துஸ்பிரயோம் செய்யப்பட்ட 67 வயதான வயோதிப பெண்..!

ஆசிரியர் - Editor I
பலவந்தமாக மதுபானம் பருக்கி பேத்தியின் கணவனால் துஸ்பிரயோம் செய்யப்பட்ட 67 வயதான வயோதிப பெண்..!

பேத்தியின் கணவனால் தான் துஷ்பிரயோம் செய்யப்பட்டதாக கூறி 67 வயதான வயோதிப பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த 07.05.2022 அன்று இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் வந்து தனக்கு பலவந்தமாக சாராயம் பருக்கி துஸ்பிரயோகம் செய்ததாக கடந்த 08.05.2022 அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 

38 வயதான நபர் ஒருவர் முள்ளியவளை பொலிஸாரல் 10ம் திகதி கைது செய்யப்பட்டார்.  சந்தேக நபரை இன்று மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு