பிரதமராக பதவியேற்றதும் ஜனாதிபதியிடம் பிரதமர் முன்வைத்த கோரிக்கை..! தேவையான நேரத்தில் பெரும்பான்மையை காட்டுவேன் எனவும் உறுதி..

ஆசிரியர் - Editor I
பிரதமராக பதவியேற்றதும் ஜனாதிபதியிடம் பிரதமர் முன்வைத்த கோரிக்கை..! தேவையான நேரத்தில் பெரும்பான்மையை காட்டுவேன் எனவும் உறுதி..

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் எனக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவரும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்ககூடாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை கோரியுள்ளார். 

பதவியேற்றதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார். மேலும், 

போராட்டக்காரர்கள் மீது எவ்விதமான பொலிஸ் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். தேவையான நேரத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவதாகவும், 

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு