மாணவியை கட்டிப்போட்டு கூட்டு வன்புணர்வு!! -4 மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைப்பு-

ஆசிரியர் - Editor II
மாணவியை கட்டிப்போட்டு கூட்டு வன்புணர்வு!! -4 மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைப்பு-

இந்தியாவின் சென்னை காசிமேட்டில் 8 ஆம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காசிமேடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்கு சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்தனர். பின்னர் கதவை பூட்டிக்கொண்டு மாணவியை கட்டிப்போட்டனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதையடுத்து 4 மாணவர்களும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் 4 பேரும் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.

தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையால் அதிர்ந்துபோன மாணவி முதலில் தனது தங்கையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் தாய்க்கு தெரிய வந்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பாடசாலை தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தார். இதன்படி கைது செய்யப்பட்ட 4 மாணவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு