சிங்கள மக்களுடன் நல்லிணக்கம் - நல்லுறவு ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்..! வன்முறை எதையும் சாதிக்காது என்பது எங்கள் படிப்பினை- டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்களுடன் நல்லிணக்கம் - நல்லுறவு ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்..! வன்முறை எதையும் சாதிக்காது என்பது எங்கள் படிப்பினை- டக்ளஸ்..

சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் ஊடாக மட்டுமே தற்போதுள்ள பிரச்சினையை தீர்க்க முடியும். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். அது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். அதற்கு மதிப்பளிக்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். 

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியங்கள் களையப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருகின்றது. ஆனால் எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றவர்கள் நாம்.

இதன்காரணமாக புலிகள் எம்மில் பலரை கொலை செய்திருக்கின்றார்கள். என்னை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். 

எனினும் தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்துவந்துள்ளோம். 

அதனடிப்படையிலேயே எமது அரசியல் செயற்பாடுகளும், தென்னிலங்கை மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனான எமது உறவும் இருந்து வருகின்றது. இந்த அணுகுமுறையினையே உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 

வன்முறைகள் ஊடாக எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனவே, எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள 

பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் என்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு