பாடசாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல்!! -உக்ரைனில் 60 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
பாடசாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல்!! -உக்ரைனில் 60 பேர் பலி-

உக்ரைனில் உள்ள பாடசாலைக் கட்டடத்தின் மீது ரஷியா படைகள் நடத்திய வெடிகுண்டுகள் தாக்குதலில் 60 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷியா படைகள் நடத்தும் தாக்குதலில் அந்நாட்டின் பல நகரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ் பகுதியில் பிலோகோரிவ்கா கிராமத்தில் உள்ள பாடசாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் குறித்த பாடசாலைக் கட்டடம் முழமையாக முற்றிலும் சேதமடைந்தது என லுகான்ஸ்க் கவர்னர் செர்கீ கைடாய் கூறியுள்ளார்.

வெடிகுண்டுகள் வீசப்பட்டபோது, அந்த பாடசாலையில் மொத்தம் 90 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 27 பேர் காப்பாற்றப்பட்டு விட்டனர். பாடசாலையில் இருந்த 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு