மூன்று முக்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

ஆசிரியர் - Admin
மூன்று முக்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவரும், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 26 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார். 

இவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2014 இறுதிவரை பணியாற்றியிருந்தார். 

பின்னர் வவுனியா மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்து மீளவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு