கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!!

ஆசிரியர் - Editor II
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!!

கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மார்க்கம் நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

குறித்த நகரில் உள்ள மசாச் நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் பொலிஸ் துறையில் பணியாற்றவில்லை என்பதை ஜோர்க் பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலத்தில் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு