புகையிலை விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுத்த கே.ஜி.எப் புகழ் 'யாஷ்'!! -குவியும் பாராட்டுக்கள்-

ஆசிரியர் - Editor II
புகையிலை விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுத்த கே.ஜி.எப் புகழ் 'யாஷ்'!! -குவியும் பாராட்டுக்கள்-

கோடிக்கணக்கான தொகைக்கு வந்த புகையிலை விளம்பர ஒப்பந்தத்தை கே.ஜி.எப் புகழ் யாஷ் நிராகரித்துள்ளதால் அவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. 

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார் அண்மையில் பிரபல புகையிலை விளம்பரத்தில் நடித்து இருந்தார். அவருக்கு எதிராக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து அக்ஷய் குமார் அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் கே.ஜி.எப் புகழ் 'யாஷ்' புகையிலை விளம்பர படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாஷ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'பான் மசாலாக்கள் மற்றும் அது போன்ற தயாரிப்புகள் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் அவற்றின் தாக்கம் உயிருக்கு ஆபத்தானது. 

தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் நலன்களுக்காக தனிப்பட்ட முறையில் மிகவும் இலாபகரமான பான் மசாலா விளம்பர ஒப்பந்தத்தை யாஷ் நிராகரித்துள்ளார்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் நலனை கருத்தை கொண்டு யாஷ் எடுத்த இந்த முடிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு