தமிழகத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்ட யாழ்.குருநகரை சேர்ந்த இரு இளைஞர்களும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது..!

ஆசிரியர் - Editor I
தமிழகத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்ட யாழ்.குருநகரை சேர்ந்த இரு இளைஞர்களும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது..!

யாழ்.குருநகர் - கடற்கரை வீதியை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இரு இளைஞர்களும் பொதைப் பொருள் கடத்தல்காரர்கள் என சுட்டிக்காட்டியுள்ள இந்திய பொலிஸார், அவர்கள் மீது இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் , தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, 

குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக 

இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு