வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது சரமாரி தாக்குதல் மற்றும் வாள்வெட்டு நடத்தி கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது சரமாரி தாக்குதல் மற்றும் வாள்வெட்டு நடத்தி கொள்ளை..!

அதிகாலை 2 மணியளவில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த வயோதிபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு வயோதிப பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை அறுத்துச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்வம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்று அதிகாலை 2 மணியளவில் வயோதிப தம்பதிகள் வாழும் குறித்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள்,

வயோதிப பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவருடைய கழுத்தில் மஞ்சள் கயிற்றில் அணிந்திருந்த முக்கால் பவுண் தாலியை அறுத்துள்ளதுடன், வீட்டிலிருந்த வயோதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவத்தில் படுகாயமடைந்த இரு வயோதிபர்களையும் பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு