ஆற்றில் இறால் பிடிக்கச் சென்றிருந்த இருவர் மின்னல் தாக்கி மரணம்..!

ஆசிரியர் - Editor I
ஆற்றில் இறால் பிடிக்கச் சென்றிருந்த இருவர் மின்னல் தாக்கி மரணம்..!

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் ஆற்றில் இறால் பிடிப்பதற்கு சென்றிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. புல்மோட்டை கரையாவெளி ஆற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் புல்மோட்டை 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வரும் புல்மோட்டை ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் சம்பவ இடத்தில் தற்பொழுது காணப்படுகின்றது. விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு