ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்த 1,000 உக்ரைன் வீரர்கள்!! -ரஷிய அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்த 1,000 உக்ரைன் வீரர்கள்!! -ரஷிய அதிர்ச்சி தகவல்-

உக்ரைன் நாட்டின் சுமார் 1,000 இராணுவத்தினர் தாமாக முன்வந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தனர் என்று ரஷியா இராணவம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தன்வசமாக்கும் முயற்சியில் ரஷிய இராணுத்தினர் ஈடுபட்டுள்ளன. அதே வேளையில் கீவ், கார்கிவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களையும் ரஷிய இராணுவம் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை மரியுபோல் நகரத்தில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவத்தினர் சரணடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மரியுபோலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் சரணடைந்துள்ளனர். 36 ஆவது மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 1,026 உக்ரேனியப் படைவீரர்கள் தானாக முன்வந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தனர் என்று தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு