சென்னைக்கு 4 ஆவது தோல்வி!!

ஆசிரியர் - Editor II
சென்னைக்கு 4 ஆவது தோல்வி!!

ஐ.பி.எல் ரி-20 தொடரில் இன்று சனிக்கிழமை நடந்த 17 ஆவது ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  தொடக்க வீரர்களாக களம் இறங்கிய உத்தப்பா 11 பந்தில் 15 ஓட்டத்திலும், ருதுராஜ் 16 ஓட்டத்திலும் வெளியேறினர்.  

இதனையடுத்து மொயின் அலி-ராயுடு ஜோடி பவுண்டரி சிக்சர்களுடன் ஓட்டங்களை உயர்த்தினர். சென்னை அணி 98 ஓட்டங்கள் இருக்கும் போது அம்பதி ராயுடு 27 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆனார். 48 ஓட்டங்கள் எடுத்திருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட்டு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது

அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 50 பந்துகளை சந்தித்த அவர் 5 போர், 3 சிக்ஸர்களுடன் 75 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரர் கென் வில்லியம்சன் 32 ஓட்டங்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  39 ஓட்டங்கள் குவித்த ராகுல் திரிபாதியும், பூரன் 5 ஓடம் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். 

ஐதராபாத் அணி 17.4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. 

சென்னை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு