அரசின் தடைகளை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம்..! கண்ணீர்புகை மற்றும் நீரை பீச்சியடித்து பொலிஸார் அராஜகம்...

ஆசிரியர் - Editor I
அரசின் தடைகளை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம்..! கண்ணீர்புகை மற்றும் நீரை பீச்சியடித்து பொலிஸார் அராஜகம்...

அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீரை பீச்சியடித்து விரட்டியுள்ளனர்.

அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவற்றைத் தடுக்க பொது அவசர நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பிறப்பித்துள்ள நிலையில், 

ஊரடங்கு உத்தரவையும் மீறி கண்டி பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகின்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு