மும்பை அணியை 23 ஓட்டங்களால் வென்றது ராஜஸ்தான்!!

ஆசிரியர் - Editor II
மும்பை அணியை 23 ஓட்டங்களால் வென்றது ராஜஸ்தான்!!

ஐ.பி.எல் ரி-20 தொடரில் இன்று சனிக்கிழமை இரவு மும்பையில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை பெற்றது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 100 ஓட்டங்களை விளாசினார். மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 

இதையடுத்து 194 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களையே எடுத்தது. இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 61 ஓட்டங்களை பெற்றார்.  இஷான் கிஷன் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு