வடக்கின் பெரும்சமர்!! -வரும் 7-9 திகதிகளில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில்-

ஆசிரியர் - Editor II
வடக்கின் பெரும்சமர்!! -வரும் 7-9 திகதிகளில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில்-

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளுக்கிடையான 115 ஆவது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் இப்போட்டிகள் எதுவும் நடைபெறாவில்லை. இந்நிலையில் இவ் வருடம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரு கல்லூரி அணிகளும் சமபலம் கொண்டவையாக காணப்படுவதினால் இக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு