1 வயது குழந்தைக்கு மது கொடுத்துக் கொலை!! -5 ஆவது காதலனுக்காக தாய் செய்த கொடூரம்-

ஆசிரியர் - Editor II
1 வயது குழந்தைக்கு மது கொடுத்துக் கொலை!! -5 ஆவது காதலனுக்காக தாய் செய்த கொடூரம்-

இந்தியாவில் தனது இன்ஸ்டாகிராம் காதலர்களுடன் உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கு இடையூறாக இருந்ததாக, தனது ஒரு வயது ஆண்குழந்தைக்கு உணவுடன் மது கலந்து ஊற்றிக் கொடுத்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

5 ஆவது காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு ஒரு வயது குழந்தை இடையூறாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கலந்து கொடுத்து கொலை செய்த குறித்த பெண் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த கீதா என்பவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்து தற்போது 3 ஆவது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார்.

இதனை அடுத்து ஒரே நேரத்தில் இரு ஆண்களை அவர் காதலித்து வந்ததாகவும் இந்த காதலுக்கு தனது ஒரு வயது குழந்தை இடையூறாக இருந்ததை அடுத்து சோறுடன் மது கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கொலையை உறுதி செய்த பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். குற்றத்தையும் அந்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு