வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலி! மேலும் 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலி! மேலும் 3 பேர் படுகாயம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (26) பதுளை அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடலிந்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயணித்த குறித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை படுகாயமடைந்தவர்களில் ஒரு சிறுவன் உட்பட 

இரண்டு சிறுமிகள் அம்பகஸ்தோவ மற்றும் பரணகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக 

பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு