11 வகுப்பு மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை!! -கைது செய்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
11 வகுப்பு மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை!! -கைது செய்த பொலிஸ்-

இந்தியா - திருச்சி துறையூரில் உள்ள தனியார் பாடசாலை ஆசிரியையும், அதே பாடசாலையில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் திகதி திடீரென மாயமாகியுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் மாணவனின் பெற்றோர் துறையூர் பொலிஸ் நிலையத்தில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை பொலிஸார் கைது செய்து, அவருடன் இருந்த மாணவனை மீட்டனர். 

விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவனுடன் சுற்றித்திரிந்ததும், பின் தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். 


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு