முடிந்தால் யாழ்ப்பாணம் அனுப்புங்கள் பார்க்கலாம்..

ஆசிரியர் - Editor I
முடிந்தால் யாழ்ப்பாணம் அனுப்புங்கள் பார்க்கலாம்..

வடமாகாணத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர்களை அல்லது ஊழியர்களை அனுப்ப விரும்பி னால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்புங்கள் பார்க்கலாம் என கூறியிருக்கும் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன், முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் சிங்கள அரசாங்க அதிபர்கள் குடியேற்றங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

வடமாகாணத்தில் உள்ள அரச வேலைகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுகின்றமை தொடர் பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலi மச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மத்திய அர சாங்கம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வடமாகாணத்தில் உள்ள அரச வேலைவாய்ப்புக்களுக்கு சிங்களவர்களை நியமித்துக் கொண்டிருக்கின்றது. 

குறிப்பாக வனத்துறைக்கு ஊர் தெரியாத சிங்கள ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது பாரிய பிரச்சினையாகும். இது n தாடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து கதைத்தே பேசவேண்டியுள்ளது. மேலும் தமிழ் அரசாங் க அதிபர்களை சிங்கள பிரதேசங்களுக்கும், 

சிங்கள அரசாங்க ஊழியர்களை தமிழ் பிரதேசங்களுக்கும் அனுப்புவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு சிங்கள அரசாங்க அதிபர்களை வடமா காணத்திற்கு அனுப்புவதாக இருந்தால் யாழ்ப்பாணம் அனுப்புங்கள். யாழ்ப்பாணம் அனுப்பாம ல் முல்லைத்தீவுக்கும், மன்னாருக்கும், வவுனியாவுக்கும் அனுப்பினால் அவர்கள் அங்கே சுதந் திரமாக சிங்கள குடியேற்றங்களுக்கு துணைபோகிறார்கள். 

அல்லது அவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் கேட்கிறேன் வடமாகாணத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர்களை நி யமிக்கவேண்டும் என நினைத்தால் யாழ்ப்பாணம் அனுப்புங்கள் பார்க்கலாம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு