அதிக சக்தி கொண்ட தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை!! -வடகொரியா மீண்டும் அதிரடி-

ஆசிரியர் - Editor II
அதிக சக்தி கொண்ட தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை!! -வடகொரியா மீண்டும் அதிரடி-

வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்க கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை செய்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், தங்கள் ஆயுத பலம் பற்றி உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு வடகொரியா அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா இன்று வியாழக்கிழமை பரிசோதனை செய்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு