டோனி அவுட்!! -சி.எஸ்.கே அணி தலைவராகிறார் ஜடேஜா-

ஆசிரியர் - Editor II
டோனி அவுட்!! -சி.எஸ்.கே அணி தலைவராகிறார் ஜடேஜா-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளார். இந்நிலையில் அவ்வணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஜடேஜா அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் ரி-20 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி அணித்தலைவர் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.

அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி அணித்தலைவராக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளை மறுதினம் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட இருக்கிறார். அணித்தலைவர் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு