சிரேஷ்ட சட்த்தரணி பயணித்த கார் மீது மோதிய டிப்பர் வாகனம்..!

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட சட்த்தரணி பயணித்த கார் மீது மோதிய டிப்பர் வாகனம்..!

கிளிநொச்சி - A-9 வீதியில் சட்டத்தரணியின் கார் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் மோதியுள்ளது. 

விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்துள்ளது. எனினும் காரில் பயணித்த சிரேஸ்ட சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். 

இதன்போது A-9 வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடியிருந்த இளைஞர்களின் உதவியுடன் பொலிஸார் சீர்செய்தனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு