லண்டனில் பாரிய வாயு கசிவு!!! -ஏராளமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
லண்டனில் பாரிய வாயு கசிவு!!! -ஏராளமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-

லண்டன் - ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் அதிகளவு குளோரின் வாயு வெளியேறியதால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு 29 பேர் வைத்திசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் 200 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுமார் 50 பேருக்கு பூங்காவில் உள்ள துணை வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு "சுவாசிப்பதில் சிரமம்" இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு