நித்யானந்தா மீது பாலியல் முறைப்பாடு செய்த வெளிநாட்டு பெண்!!

ஆசிரியர் - Editor II
நித்யானந்தா மீது பாலியல் முறைப்பாடு செய்த வெளிநாட்டு பெண்!!

ராமநகர் மாவட்டம் பிடதி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் சுவாமி நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார். 

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் சுவாமி நித்யானந்தாக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார். 

அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி பொலிஸ் நிலையத்திற்கு இ-மெயில் மூலம் அவர் முறைப்பாடு அனுப்பி வைத்திருந்தார். அதில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார், அவரது சீடர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். 

மேலும் அந்த பெண் தனது ருவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார். ஆனால் நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் முறைப்பாட்டின் பேரில் பிடதி பொலிஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மாறாக இ-மெயில் மூலம் செய்த முறைப்பாடு மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை.

யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள ஏதாவது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அந்த பெண்ணுக்கு பிடதி பொலிஸார் பதிலளித்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு