சீனா விமானம் மலையில் விழுந்து விபத்து!!- அதில் சென்ற 132 பயணிகளும் பலி என தகவல்-

ஆசிரியர் - Editor II
சீனா விமானம் மலையில் விழுந்து விபத்து!!- அதில் சென்ற 132 பயணிகளும் பலி என தகவல்-

சீனா நாட்டிலுள்ள போயிங் விமானம் மலையில் மோதி விழுந்து விபத்துக்குள்ளான கோர விபத்து சம்பவத்தில் அதில் பயணித்த 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான ‘சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்று திங்கட்கிழமை காலை அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது. 

அந்த விமானத்தில் 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்தனர். விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாலையுடன் விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி மாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் மலையில் மோதி விழுந்தவுடன் அதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. அந்த மலைப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், இராணுவம், பொலிஸார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து 2 ஆவது நாளாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போதுவரை விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால் இந்த விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு